வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான புதிய வசதி

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்க முடியும். www.slbfe.lk என்ற இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

பணியாளர்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை இதன் ஊடாக பதிவேற்ற முடியும். முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.