பொத்துவில் பாணமையில் அதிகாரிகள் பொதுமக்கள் முறுகல்; ஐவர் கைது

பொத்துவில் பாணமை காட்டுப்பகுதியில் சிறிய குழப்பநிலையொன்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள காட்டுப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே அங்கு பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பாணமையில் உள்ள வனவிலங்கு காரியாலயத்திற்குள் நுழைந்த சிலர் அங்கு அந்த அலுவலகசத்தைச் சேதப்படுத்தியதன் விளைவாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் முச்சக்கர வண்டிகள் இரண்டு சாவிக் கொத்துக்கள் காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

சிறுத்தைப் புலியினால் கொல்லப்பட்டவரை வன விலங்கு அதிகாரிகள் காப்பாற்ற முன்வராததே கிராம மக்களின் சீற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.