வவுனியா விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விநாயகபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இராசேந்திரகுளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கொண்டா ரக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியின் வீதியின் அருகேயுள்ள மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 25,26வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.