அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ?நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை!

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

உதயநிலா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதயநிலா பிரீமியர் லீக் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத்தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்.

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இந்ம மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும். இன்று (நேற்று) கூட யாழ்ப்பாணம் இந்துக்கலர்லூரியின் மாணவன் ஒருவன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய்தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தான்.

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வானது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் வழங்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்மாவட்ட காணி உரித்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பத்மஸ்ரீ கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் கரைச்சி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி முன்னாள் அதிபர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மாவட்ட பயிற்றுவிப்பாளர் ச.குமார் கரைச்சி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நிகழ்வின் அனுசரணையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன்,கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.