சாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் அறிவித்தல்!

தற்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக சாரதி உரிமத்தை புதுப்பிப்பதற்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு கூடிய விரைவில் வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதுபோன்ற நீட்டிப்பு வழங்கப்படுவது இதுவே கடைசி முறை என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், காலாவதியாகிய நபர்களின் சாரதி உரிமங்களைத் புதுப்பிப்பதற்கான இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, முதன்முறையாக, கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 30 வரை காலாவதியான அனைத்து சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் கடைசி நாளிலிருந்து ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகு இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த காலகட்டத்தை 03 மாதங்களுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாரதி உரிமம் காலாவதியானால், நரஹன்பிட்ட தலைமை அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளித்து செய்து சாரதி உரிமத்தை புதுப்பிக்க இன்னும் வாய்ப்பு உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.