கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் பொருட்கள் வழங்கி வைப்பு !
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் 20000 ரூபாய் நிதியுதவியில் வேலணை ஆறாம் வட்டாரம் மற்றும் புங்குடுதீவு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட முப்பது குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் , கிருமிநாசினி பொருட்கள் போன்றவை வழங்கிவைக்கப்பட்டன .
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்ட பலரும் இச்செயற்பாடுகளில் கலந்துகொண்டிருந்தனர். ..
கருத்துக்களேதுமில்லை