தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா!
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா –2020 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (12) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக ஊடகம் தொடர்பில் அடிப்படை பட்டப்படிப்பை நிறைவுசெய்த 76 பட்டதாரிகள் பட்டம் பெற தகுதிபெற்றுள்ளனர்.
இதன்போது பிரதமரினால் 50 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகமும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான எம்.டி.ஆர்.காமினி அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை