சீரற்ற வானிலை : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக,  23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த, 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில். கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 ஆயிரத்து 482 பேர் மண்முணை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாணத்தில் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 800 பேரும், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 745 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.