8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, எஹலியகொட, பாணந்துரை மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எஹலியகொட பொலிஸ் பிரிவு

  • மின்னான கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • போபத்எல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • அஸ்கங்குல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • ககுதாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுபாணந்துரை பொலிஸ் பிரிவு
  • 675 தொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுபேருவளை பொலிஸ் பிரிவு
  • மிக்கொன கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • மக்கோன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.