கம்பஹா பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் கொள்ளை
கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனமொன்றில் நேற்று (15) துப்பாக்கிகளுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள், சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான பணம், தங்க நகைகளைக் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரு கொள்ளையர்களும் தங்களது முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கொள்ளையர்களைக் கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை