மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; வர்த்தக நிலையங்கள் பூட்டு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு கடந்த வாரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

குறித்த பரிசோதனைகளின்போது மன்னார் நகர பகுதி மற்றும் பஸார் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார துறையினர் இணைந்து இதுவரை பிரதான கடை தொகுதிகளில் சுமார் 15 வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் நேற்று  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.