விமான நிலையங்கள் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீள் திறப்பு- பிரசன்ன ரணதுங்க

சுற்றுலாப் பயணிகளுக்காகத் விமான நிலையங்கள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும்

திறக்கப் படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலாப் பயணி களின் வருகைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப் பட்டது.

 

எனினும் முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக உக் ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடை வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலாப் பயணி களுக் கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படவுள்ளதாக பிரசன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்குப் பிரவேசிப்பதற்கு 72 மணித்தி யாலங்களுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரண துங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.