மேலும் 769 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை