கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் விவசாயி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதி..

புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாகண்டல் பகுதியிலுள்ள தனது வயலை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, நடந்துவரும் பாதையின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அவரை  மாற்றியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.