இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு !
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 709 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 7 ஆயிரத்து 834 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 683 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 287 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை