இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (27) முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் ஆரம்பமான பேரணி, யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள், தமது கோரிக்கை மனுவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.