சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு
சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இன்று (28) அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறும் மாபெரும் நீதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை