(வீடியோ) கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனினால் குருந்தையடியில் 70 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு!
நாங்கள் உங்களுக்கு உதவி செய்வது எல்லாம் நீங்கள் எதிர்காலத்தில் கல்வி கற்று ஒரு நல்ல ஒரு புத்திஜிவிகளாகவும் நல்ல தலைவர்களாக வர மிளிர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் தெரிவித்தார்.
கல்முனை குருந்தையடி பகுதியில் மாநகரசபை உறுப்பினர் ராஜன் அவர்களால் 70 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் இன்று (02)வழங்கி வைக்கப்பட்டது இதன் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார் மேலும் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார் .
கருத்துக்களேதுமில்லை