பொத்துவில்- பொலிகண்டி: தடையுத்தரவு வழங்கும் பொலிசார்; பொத்துவிலில் அடைமழை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிசார்
பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், பெருமளவு மக்களும், அரசியல் பிரமுகர்களும்
பொத்துவில் நகரில் குவிந்து வருகிறார்கள்.

தற்போது அந்த பகுதியில் அடை மழை பொழிந்து வருவதால் பேரணியை ஆரம்பிப்பதில் தாமதம்
நிலவுகிறது.

போராட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களை வழிமறித்து, பலருக்கு நீதிமன்ற தடையுத்தரவு
வழங்கப்பட்டு வருகிறது.

 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல்

எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.