பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல இது! எமக்கும் இந்த நாடு சொந்தம் : சுமந்திரன் எம்.பி.

சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.குறித்த பேரணி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் சிங்கள, பெளத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்றாலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பேசும்போது தான் சிங்களப் பெளத்தன் என்று தெரிவித்தார்.அவர், அவ்வாறு கூறியது எங்களுக் குப் பிரச்சினை இல்லை. எனினும், இந்த நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.எங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதே போன்று பெரும்பான்மை மக்களும் இந்த நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்ற முடியாது.இதனடிப்படையில், நாங்கள் இந்தப் பேரணியை மேற் கொள்கின்றோம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.