100 தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தி இன்று நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கீழ் மட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக பல பொறுப்புக்கள் நியமிக்கப்படவுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும்.

இதேவேளை, இந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுகிறாதா என்பது தொடர்பில் காண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.