ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.

அவர்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பேராயர் கோரியுள்ளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.