ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்: மட்டக்களப்பில் பாடசாலையொன்றில் தேடுதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாடசாலை வளாகத்தினுள் விசேட அதிரடிப்படையினரும் பொலஸாரும் இணைந்து இந்தத் தேடுதலை முன்னெடுத்தனர்.

வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தினுள் வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இதன்போது எவ்விதமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் தேடுதல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.