திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறையை எதிர்த்து திருகோணமலை நகரின் மத்தியில் மீனவர்கள் இன்று(10) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

டைனமைட், தடைசெய்யப்பட்ட வலை, தடை செய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் தொடர்ந்தும் இடம்பெறுவதை கண்டித்தும் உரிய அதிகாரிகள் இதன் நிமித்தம் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை கடலோர காவல் படை, இலங்கை கடற்படை, இச் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முனவர்கள் கோஷம் எழுப்பினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.