ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது-உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
(பாறுக் ஷிஹான்)
ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது . கடந்த காலங்களில் இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு அரசாங்கம் கேட்டிருந்ததுடன் திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை காணமுடியும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(11) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.அதாவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஜனாசாக்களை (மரண உடல்கள்) அடக்கம் செய்யவும் முடியும் என கூறியுள்ளார்.இந்த கருத்தினை முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் பலரும் இதனை தீர்வாக பார்க்கின்றார்கள்.அந்தவகையில் உலமா கட்சியினராகிய நாங்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பங்காளி கட்சியாக இருக்கின்ற வேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இக்கருத்து ஆறுதலையும் மனநிம்மதியையும் தருகின்றது.ஏனெனின் ஜனாசா எரிப்பினை முஸ்லீம் சமூகம் முற்றிலும் விரும்பாத செயலாக நாம் கண்டிருக்கின்றோம்.கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனாசா எரிப்பை தவிர்த்து நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டு வருகின்றோம்.இதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடமும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.அதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச பசில் ராஜபக்ச பவித்ரா வன்னியராட்சி ஆகியோரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
கருத்துக்களேதுமில்லை