யாழில் வீடொன்றுக்குள் புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல்!

நவாலி அரசடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்தக் கும்பலை துரத்திச் சென்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸார்ரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே குறித்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் என அடையாளப்படுத்துபவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.