வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். புதிய பேருந்து தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்து வந்த நிலையில் யாழ் மாநகர சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம் முடிவானது யாழ்ப்பாணம் போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவித்து இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.