வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு !

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளது.

குறித்தநபர் நேற்றையதினம் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக கிடப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.