கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது

திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கைதை தலைதலைமையகப்பொலிஸார் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச்சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும், ஜாவா நகர்,கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த தலைமையகப் பொலிஸார் இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கையைகளை மேற்கொள்வதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.