யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் பங்காற்றியது இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட சில தடங்கள் நிலை காரணமாக எமது வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அண்மையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்டதோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தற்போது அந்த நிலைமை மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.