வடக்கில் மாவை கிழக்கில் சாணக்கியன்! முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறக்கம்?

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவையும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனையும் களமிறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிகை்கையை முன்வைத்துள்ளார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றவேளையே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனுக்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.