கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம்   எனும் செயற்திட்டத்தின் கீழ் மரங்கள்  வழங்கி வைப்பு !

கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம்   எனும் செயற்திட்டத்தின் கீழ்  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன்  நாவலன் அவர்களினால்  தீவகத்தில்  பயன்தரு மரங்கள்  வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .
அதன் தொடர்ச்சியாக வேலணை பிரதேச சபை உறுப்பினர்  கருணாகரன் நாவலன் அவர்களின்  நிதியுதவியில்  அல்லைப்பிட்டியில்  150 வாழைகள்  வழங்கிவைக்கப்பட்டன .
அத்தோடு  புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்தவர்களும் கனடாவில் வாழ்ந்து வருபவர்களுமான  சிவராசா – கேசவராணி தம்பதிகளின் நிதியுதவி மூலம்    புங்குடுதீவின்  ஊரதீவு , கேரதீவு , இறுப்பிட்டி பகுதிகளில் வாழ்கின்ற  மக்களுக்கு  300 வாழைகள் வழங்கிவைக்கப்பட்டன .
  முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் பிலிப் பிரான்சிஸ்  , தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களான  கருணாகரன் குணாளன் , தர்சன்  ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.