கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் மரங்கள் வழங்கி வைப்பு !
கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களினால் தீவகத்தில் பயன்தரு மரங்கள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .
அதன் தொடர்ச்சியாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் அல்லைப்பிட்டியில் 150 வாழைகள் வழங்கிவைக்கப்பட்டன .
அத்தோடு புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்தவர்களும் கனடாவில் வாழ்ந்து வருபவர்களுமான சிவராசா – கேசவராணி தம்பதிகளின் நிதியுதவி மூலம் புங்குடுதீவின் ஊரதீவு , கேரதீவு , இறுப்பிட்டி பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு 300 வாழைகள் வழங்கிவைக்கப்பட்டன .
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் பிலிப் பிரான்சிஸ் , தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , தர்சன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .
கருத்துக்களேதுமில்லை