நாரங்கல மலைப் பிரதேசத்திற்கு பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

பதுளை நாரங்கல மலைப் பிரதேசத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்இ அங்கு உட்பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த மலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றை கருத்திற்கொண்டு நாரங்கல மலைப் பிரதேசத்திற்கு உட்பிரவேசிக்க தடை விதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

உத்தரவை மீறி நாரங்கல மலைப் பிரதேசத்திற்கு உட்பிரவேசிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.