நெல் கொள்வனவின்போது மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை!

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஏப்ரல்  மாதம் 7ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த தொகை நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தொகை நெல்லினை கொள்வனவு செய்வது தொடர்பில் 6 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கே இவ்வாறு முன்னுரிமை அளிக்குமாறும் அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பிரதேசங்களில் இருந்து 60 லொறிகள் ஊடாக நாளொன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.