ராவண எல்ல வனப்பகுதியில் தீப்பரவல்

பதுளை ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு bell 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை  இதுவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாதுள்ள நிலையில் bell 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸார் ராணவத்தினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.