அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்

அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.

இன்று (6) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டமானது 2 ஆவது நாள் இவ்விளைஞனின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகி உள்ளது.

இது தவிர குறித்த போராட்டத்தில் நேற்று(5) அம்பாரை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி , அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ,பிரதீபன் உட்பட சில அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

இவ்வாறு உள்ள நிலையில் இன்று(6) காலை குறித்த இளைஞன் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்
.
இவர் தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் மறுவடிவமாக இப்போராட்டமானது சுவிஸ் நாட்டில் உண்ணாவிரதம் உள்ள பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுத்துள்ளேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரான நான் சாதாரண குடும்பத்தில் உள்ள நான் மக்களுக்காகவே போராடி வருகின்றேன்.எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பயப்படப்போவதில்லை.எனது இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன்.

சுழற்சி முறையான இப்போராட்டத்தில் பல்வேறு தடைகளை உடைத்து முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.எதிர்வரும் 10 திகதி வரை இச்சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.இப்போராட்டத்திற்கு பி2பி பேரணியில் பங்கு பற்றியவர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.முஸ்லீம் மக்களும் எம்மை தொப்புள் கொடி உறவுகளாக எம்மை மதித்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.என அவர் கேட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.