சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் லியோ கிளப் ஒஃப் சிசிலியன்ஸ் ஆகியன இணைந்து ‘ஆளுமை மிக்க தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறுபட்ட பகுதிகளில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.
ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் பல துறைகளிலும் தலைமைத்துவத்தில் உள்ள பெண்களை கௌரவிப்பதும் , பெண்பிள்ளைகளை ஊக்குவிப்பதும் இந் நிகழ்வின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
இதன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் திருமதி.மங்களேஸ்வரி சங்கர் ஆகிய இருவருக்கும் ஆளுமை மிக்க தலைமைத்துவம் எனும் பாராட்டு சின்னங்கள் இவ் வலையமைப்பினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு வலைய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.