தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும்- தர்மலிங்கம் சுரேஸ்

சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளின் நலனை மட்டும் முன்னிறுத்தி செயற்படாமல் இலங்கையில்உள்ள தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐநா மனித உரிமைகள்பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு அநீதிகளுக்கு எதிராக சர்வதேசத்தின்நீதியை கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் ஏழாவது நாளாகவும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின்ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஏழாவது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது. இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்தர்மலிங்கம் சுரேஸ்,ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நகுலேஸ் மற்றும் ஊடகசெயலாளர் சாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம்,கிழக்குபல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம், உட்படபல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகள்சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகதமிழ் மக்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என இங்குகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.பிரித்தானியாவுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது இலங்கையினை ஒரு கொலனியாக மீண்டும் மீண்டும் பாவிக்காமல் இங்கிருக்கின்ற சிங்கள-தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடியதாகதாங்கள் நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் என்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்துவடகிழக்கில் சுழற்சி முறையிலான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் தமிழ் தேசியமக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.