அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை

(பாறுக் ஷிஹான்)

அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று  ( 10)திடீரென    காற்று  அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை,  நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை,அக்கரைப்பற்று ,பகுதிகளில் கடும் மழையுடன் காற்று   வீசியது.இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.