கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் தடை குறித்து மக்களுக்கு அறிவிப்பு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை மறுதினம் (13) கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, அம்பாறை பிரதான வீதி, கல்முனை பிரதான வீதி, வீரமுனை, புதுப்பள்ளி, தைக்காப்பள்ளி, சொறிக்கல்முனை, விழினியடி, பொலிஸ் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (15) நிந்தவூர், சாம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணாவத்தை, தியட்டர் வீதி, மல்கம்பிட்டி, நெய்னாகாடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (16) கல்முனை, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, அன்னமலை, நட்பிட்டிமுனை, மணல்சேணை, சேனைக்குடியிருப்பு, ஒலுவில், திராய்கேனி ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் மின் தடைப்படும்.

புதன்கிழமை (17) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர்பகுதிகளில் பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

வியாழக்கிழமை (18) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணாவத்தை வௌவாலோடை, சென்னல் கிராமம், உடங்க 40 வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

சனிக்கிழமை (20) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஜீ.ரீ.ஸி. தெற்கு, வடக்கு வீதி, முஸ்தபா புரம், ஹிஜ்ராபுரம், சம்புமடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.