அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம்

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.