ஆதி சிவன் ஆலயத்தில் விமர்சையாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் காரைதீவு ஆதி சிவன் ஆலயத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி விழா 11.03.2021 மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர்,காரைதீவு கலாசார உத்தியோகத்தர்
மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முதற்கட்ட நிகழ்வாக காரைதீவு ஆதி சிவன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஏனைய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இரண்டாம் கட்ட நிகழ்வாக
ஆலயத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் மற்றும் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பேட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.