வட மாகாணத்தில் மேலும்  7 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும்  7 பேருக்கு கொரோனா தொற்று இன்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையா ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.