பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது

தன்னை உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டி, பொல்வத்தை பகுதியில் பொலிஸாரால்  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர்  பொலிஸ் சீருடை அணிந்த தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.