கனிதரும் மரங்களால் தீவகத்தை வளம்பெறச்செய்வோம்!
கனிதரும் மரங்களால் தீவுப்பகுதியை வளம்பெறச்செய்வோம் எனும் கருத்திட்டத்தினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்கள் முன்னெடுத்துச்செல்கின்றார் . அதற்கமைய அண்மையில் மகா சிவராத்திரி தினமன்று புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் அருகில் அமைந்துள்ள சதானந்த சிவன் கோயிலில் சிவனடியார்களுக்கு மா , கொய்யா , கஜூ , தேசி , நெல்லி போன்ற பயன்தரு மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன .
அத்தோடு புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவு பகுதியிலும் கனிதரும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன . வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் சமூக ஆர்வலர்களான நவரத்தினம் சிவானந்தன் ( சுவிஸ் ) , சுரேஸ்குமார் ஆனந்தி ( சுவிஸ் ) ஆகியோரின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான சண்முகராஜா தரங்கன் , கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .
கருத்துக்களேதுமில்லை