கனிதரும் மரங்களால் தீவகத்தை வளம்பெறச்செய்வோம்!

கனிதரும் மரங்களால் தீவுப்பகுதியை வளம்பெறச்செய்வோம் எனும் கருத்திட்டத்தினை  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்கள் முன்னெடுத்துச்செல்கின்றார் . அதற்கமைய அண்மையில்  மகா சிவராத்திரி தினமன்று  புங்குடுதீவு  அரசினர்  வைத்தியசாலையின்  அருகில்  அமைந்துள்ள  சதானந்த சிவன் கோயிலில் சிவனடியார்களுக்கு   மா , கொய்யா , கஜூ , தேசி , நெல்லி போன்ற பயன்தரு மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன .
அத்தோடு  புங்குடுதீவு  ஐந்தாம் வட்டாரம்  கேரதீவு பகுதியிலும்  கனிதரும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன .   வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும்  சமூக ஆர்வலர்களான  நவரத்தினம் சிவானந்தன் ( சுவிஸ் ) , சுரேஸ்குமார் ஆனந்தி ( சுவிஸ் )    ஆகியோரின் நிதியுதவியில்  மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளில்   தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான  சண்முகராஜா தரங்கன் ,  கருணாகரன் குணாளன் ஆகியோரும்  கலந்துகொண்டிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.