யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் – மகேசன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்துக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை வரையான நிலைவரப்படி ஆயிரத்து 116 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 12 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

மேலும், கொரோனாத் தொற்று அச்சநிலை காரணமாக ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 42 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.