கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

(வா.கிருஸ்ணா)

முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்றது.

விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு முருங்கை மரக்கன்று களை விநியோகிக்கும் பணிகள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் ‘வாழ்க்கைக்கான தோட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைவாக புதுவருடத்தில் தலையில் எண்ணை பூசும் சுபநேரத்துக்கு இணைவாக இந்த முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.