வவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்டு என தெரிவித்து சுவரோட்டிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நீதியினை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரோட்டி வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.04.2021) அதிகாலை ஒட்டப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 02 வருடங்கள் சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரோட்டிகளை இவ்வாறு வவுனியா நகர் , குருமன்காடு , நூலக வீதி , நகரசபை வீதி , வைரவப்புளியங்குளம் , குருமன்காடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரோட்டிக்கு மக்கள் விடுதலை முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.