வவுனியா நகரசபையால் 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

வவுனியா நகரசபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன.

புதுவருடப் பிறப்பைத் தொடர்ந்து நகரில் அதிகரித்துள்ள வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வவுனியா நகரசபையினால் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (21.04) 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600 ரூபா, தண்டம் 1000 ரூபா, ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300 ரூபாய் விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.