ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது!
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதோடு , ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னார் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதின், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்தும் , பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரான ரியாஜ் பதியூதின், கொழும்பு வௌ்ளவத்தையில் வைத்தும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது தெரிவித்தார் .
கருத்துக்களேதுமில்லை